திருவள்ளூர்: அத்திப்பட்டு வைகுண்டவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா..... ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம்,அத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி வைகுண்ட வாச பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. யாக கலச பூஜைகளுடன் கலச நீர் ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டு கோபுர கலசங்களுக்கும் ஆதி வராகர் ஸ்ரீ வேணுகோபாலன் நரசிம்மர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் வைகுண்டவாச பெருமாளுக்கும் கும்பாபிஷேக விழாவானது நடத்தப்பட்டது.
பின்னர் பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது அப்போது கருடன் வலம் வந்ததால் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர்.இதில் மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.இதில் ஊராட்சி மன்ற தலைவர் எம்டிஜிஜி சுகந்தி வடிவேல் துணை தலைவர் எம் டி ஜி கதிர்வேல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments