• Breaking News

    தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணத் தேவன் பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்


    தமிழக அரசின் துவக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, முதல்வரின் காலை உணவு திட்டம், 2022 செப்., 15ல் துவங்கப்பட்டது. காலை உணவு திட்டத்திற்கு, மாணவர்கள், பெற்றோர் தரப்பில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . இதையடுத்து இத்திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும் என பெற்றறோர்கள் ,ஆசிரியர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

     அதன்பேரில் தமிழக முதலலைமச்சர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள்  பயன்பெறும் பெறும் வகையில் காலை உணவு திட்டத்தினை  தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர், ஒன்றிய குழு தலைவர்கள்,ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,வட்டார கல்வி அலுவலர்கள் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.அதன்படி கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாராயணத்தேவன்பட்டியில் ஸ்ரீ.இராமகிருஷ்ணா வித்யாலயம் துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தினை கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிமணி கணேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனி, வட்டார கல்வி அலுவலர் மகாலட்சும்,பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் தங்கராஜ், உறுப்பினர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடக்க நாள் நிகழச்சியையொட்டி மாணவ. மாணவியர்களுக்கு பொங்கல், உப்புமா வழங்கப்பட்டது.

    No comments