• Breaking News

    தேனி: கம்பம் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது


    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன் பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.இந்த திருக்கோவிலில் 100 வருடங்களுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழாவினை இன்று நடத்தினார்கள்.விழாவில் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து, யாக குண்டம் வளர்த்து, கணபதி கோமத்தினை நடத்தினார்கள்.அதன் பின்னர் புனித நீரினை எடுத்துச் சென்று விமான கோபுர கலசத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடத்தி புனித நீரினை ஊற்றினார்கள்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவரின் மீதும் புனித நீரினை தெளித்து இறை வழிபாட்டு நிகழ்ச்சியை மிக விமர்சையாக நடத்தினார்கள்.இந்த விழாவில் தேனி மாவட்டம் மற்றுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருள் பெற்றுச் சென்றனர்.

    மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் தேனி பாராளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விநாயகரிடம் ஆசி பெற்றுச் சென்றார்.விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் சிறப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    No comments