மாடம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ கன்னியம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது
மாடம்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கனக மாடம்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் 21 ஆம் ஆண்டு ஆடி மாதம் நான்காம் வாரம் கூழ் வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழாவில் பந்தக்கால் நடுதல், காப்பு கட்டுதல், சிறப்பு அபிஷேக தீப ஆராதனை, பதிவிலக்கு, கூழ் வார்த்தல், தீ மூட்டுதல், தீமிதி தொடக்கம், வானவேடிக்கை,சிறப்பு அன்னதானம், கும்பமிடுதல், தெருக்கூத்து, என வெகு சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதில் அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் பொன்னியம்மன் ஆலய நிர்வாகிகள் சி.ஏழுமலை, ரஜினி, அரங்கநாதன், கோபால், தயாளன்,மனோகர், பொன்வேல்,தேவு, சக்கரவர்த்தி, வரதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் தாய் மூகாம்பிகை நகர் முதல் தெரு மாடம்பாக்கம் பொன்னியம்மன் குடியிருப்பு நல சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ கன்னியம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய பக்தர்கள்,மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
No comments