• Breaking News

    மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.... தேர்வழி ஊராட்சியில் டி.ஜெ.கோவிந்தராஜ் எம்எல்ஏ பங்கேற்பு


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர்  முகாம் தேர்வழி ரெட்டம்பேடு வழதலம்பேடு ஆத்துப்பாக்கம் மங்காவரம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பங்கேற்ற  மக்களுக்கான மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி  நடைபெற்றது.


     இந்நிகழ்ச்சியினை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான டி.ஜெ கோவிந்தராஜன் துவக்கி வைத்து  தீர்வு காணப்பட்ட மனுகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார் இதில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரசேகர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அரசு துறை சார்ந்த 17 துறைகள் சார்பான கோரிக்கை குறித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.

    இதில்  துணை சேர்மன் மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் மாவட்ட பொருளாளர் ரமேஷ் நகர செயலாளர்கள் அறிவழகன் ரவிக்குமார் மற்றும் காளரத்தி தேர்வழிஊராட்சி மன்ற தலைவர் கிரிஜாகுமார் ரெட்டம் பேடு ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் குப்புசாமி சங்கர் வழிதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலைசுகு ஆத்துப்பக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள்.மங்காவரம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில்  நின்று பல்வேறு கோரிக்கை குறித்து மனு அளித்தார்.

    No comments