வயநாடு நிலச்சரிவு..... டீ விற்று நிதி சேகரிக்கும் சமூக அக்கறையாளர்கள்
சிதைந்து கிடக்கும் வயநாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும் டீக்கடை தனி கவனம் பெற்றுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டில் வயநாடு நிலச்சரிவுக்கு நிதி வசூலிப்பதற்காக ஒரு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் டீக்கடையை தொடங்கியுள்ளனர்.தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள, “இந்த கடையில் டீ குடிக்கலாம், பலகாரம் சாப்பிடலாம் பணம் வயநாட்டிற்கே” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த கடையை மலையாள நடிகர் உன்னி ராஜ் தொடங்கி வைத்தார்.
No comments