கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டையில் புதிய ஆயில் தொழிற்சாலையை வி.சி.க தலைவர் திறந்து வைத்தார்
கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டையில் சிப்காட் தொழிப்பேட்டையில் யுனிக் லூப்ஸ் அன்ட் கிரீஸ் தொழிற்சாலையை விசிக தலைவர் நாடாளுமன்ற தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மௌலானா , விசிக தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், மாநில துணை செயலாளர் சா.ரஜினிகாந்த், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.நீலமேகம்,மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர், தொகுதி செயலாளர் ஜெ.ஜீவா, ஒன்றிய செயலாளர் புலியூர் ஆனந்தன்,ஒன்றிய பொருளாளர் செ.சுகுமார் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து தொழிற்சாலையை திறந்து வைத்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.தொடர்ந்து மாற்று திறனாளி ஒருவருக்கு உதவி தொகையை வழங்கியவர், கோவில் நுழைவு பிரச்சனை குறித்து மனு அளித்த வழுதலம்பேடு மக்களிடம் கோவிலில் வழிபட உரிமை மறுக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களின் உரிமைகள் மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர் தமிழகத்தில் வழுத லம்பேடு உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலய நுழைவு மறுக்கப்பட்டுள்ளதால், இதுகுறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என்றவர், மாநில கட்சியாகவும் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியாகவும் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்ற அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என சாக்கு காட்டி தடை விதிக்கும் போக்கை கண்டிப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறுபுழல்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா மூர்த்தி இல்லத்திற்கு சென்ற போது அவருக்கு ஊராட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
No comments