• Breaking News

    குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 354 திருமணங்கள்..... இதுவே முதல் முறை

     


    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு முகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுகிறது.

    மேலும் சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் முகூர்த்த நாளான இன்று குருவாயூர் கோயிலில் 354 திருமணங்கள் நடைபெற்றன. ஒரே நாளில் இவ்வளவு திருமணங்கள் நடந்தது இதுவே முதல் முறையாகும். இதுவரை கடந்த 2017 ஆம் ஆண்டில் 227 திருமணங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இருந்து வந்தது.

    அதை முறியடிக்கும் வகையில் இன்று 363 திருமணங்களுக்கு முதலில் பதிவு செய்யப்பட்டதாகவும் இதில் 9 குழுக்கள் தேவஸ்தானத்திற்கு தெரிவிக்காததால் 354 திருமணங்கள் மட்டுமே நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments