• Breaking News

    அரசு பள்ளி மாணவ,மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்

     


    திருவள்ளூர் மாவட்டம்  பெரியபாளையம், கன்னிகைபேர், ஊத்துக்கோட்டை, உள்ளிட்ட அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சம்பத், பேரின்பசெல்வி, ஜெயச்சந்திரன், செந்தில் வள்ளி, ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ஆ.சக்திவேலு, ஏழுமலை, தமிழ்ச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்முடிபூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு 11 ஆம் வகுப்பு கல்வி பயிலும் 632 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

     இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள், பி.ஜெ.மூர்த்தி, டி.கே.சந்திரசேகர், ஜான்பொன்னுசாமி, மாவட்ட திமுக நிர்வாகிகள் ஏ.வி.ராமமூர்த்தி, தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, வி.பி.ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் பா.சே.குணசேகரன்  ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல், எல்லாபுரம் ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், ஏனம்பாக்கம் சம்பத், ஊத்துக்கோட்டை வார்டு கவுன்சிலர்கள் கோல்டுமணி, பார்த்திபன்,கோகுல கிருஷ்ணன்,மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    No comments