கட்டுமாவடி-மீமிசல்,ஆவுடையார்கோவில் பகுதிகளில் மின்நிறுத்தம் அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, September 17, 2024

கட்டுமாவடி-மீமிசல்,ஆவுடையார்கோவில் பகுதிகளில் மின்நிறுத்தம் அறிவிப்பு

 


புதுக்கோட்டை மாவட்டம்,நாகுடி, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், திருப்புனவாசல், கரூர், பொன்பேத்தி, ஆவுடையார் கோவில்  ஆகிய பகுதிகளில் 19-09-2024  வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும், இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது" என்றும் அறந்தாங்கி மின்வாரிய  செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். அறந்தாங்கி, கீரமங்கலம், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை துணை மின் நிலையங்களில் மின்நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. எனவே இந்த பகுதிகளில் மின்விநியோகம்  இருக்கும். வேறொரு நாளில் மின்நிறுத்தம் செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment