• Breaking News

    ஓபசமுத்திரம் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி வட்டம் ஓபசமுத்திரம்   அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம்   புனரமைப்பு பணிகள்   பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.தொடர்ந்த  சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து     கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர்.

    இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

    இதனையடுத்து அங்கு கூடியிருந்த   பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.   இதில் கும்மிடிப்பூண்டி  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார் கவுன்சிலர் மெய்யழகன்  துரைஜெயவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் கோவில் நிர்வாகி ஊர் பொதுமக்கள் சார்பில்  அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    No comments