தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை கடற்படைக்கு சொந்தம் - இலங்கை அரசு உத்தரவு
தமிழக மீனவர்கள் கரை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பொழுது அவர்களது படகுகளை பறிமுதல் செய்துவிடுவர்.
இது போன்ற கைது நடவடிக்கைகளுக்கும் படகுகளை பறிமுதல் செய்வதற்கும் மீனவர்கள் பல முறை வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இலங்கை அரசின் முடிவு ஒன்று தமிழக மீனவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 13 படகுகளை இலங்கை கடற்படைக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
No comments