• Breaking News

    தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு

     


    நாகை: மத்திய பிரதேசம் மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் UNDER - 17 பிரிவில்   தமிழ்நாடு அணி சார்பாக நான்கு பேர் கொண்ட குழு கலந்துகொண்டது.  இக்குழுவில் நாகப்பட்டினம் மாவட்டம் , தேவூர் இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளியில்    எட்டாம் வகுப்பு பயின்று வரும் கே.மிதுன் கலந்துகொண்டார். தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில் கே.மிதுன் இரண்டாம் இடம் பெற்று தமிழ்நாட்டிற்கும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும், அவர்  பயின்று வரும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.வெற்றிபெற்ற மாணவர் கே.மிதுன்க்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


    மக்கள் நேரம் எடிட்டர் & நாகை நிருபர் ஜீ.சக்கரவர்த்தி

    விளம்பர தொடர்புக்கு 9788341834

    No comments