மணப்பாறை நிலநடுக்கம்...? அதிகாரிகள் சொல்வது என்ன....
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அச்சத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இது குறித்து அறிந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அது பூகம்பம் இல்லை. இடி சத்தம் காரணமாகவே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் பயப்பட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
No comments