கட்டுமாவடி, மீமிசல் ஆவுடையார்கோவில் பகுதிகளில் மின்நிறுத்தம் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டினம், மீமிசல், திருப்புனவாசல், கரூர், பொன்பேத்தி, ஆவுடையார்கோவில், அரசர்குளம், சுப்பிரமணியபுரம், திருவாப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் 23 ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும், இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது" என்றும் அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments