சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியானது. விளையாட்டின் உயரிய மேஜர் தயான் சந்த் 'கேல் ரத்னா' விருது, இம்முறை நான்கு நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் குகேஷ் 18, சீனாவின் டிங் லிரெனை 32, வீழ்த்தினார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்தார் குகேஷ். தவிர, செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா தங்கம் வெல்ல கைகொடுத்தார். இவருடன், குகேஷ், மனு பாகர், ஹர்மன்பிரீத் சிங், பிரவீன் குமார் ஆகியோரும் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று (ஜன.,17) ஜனாதிபதி மாளிகையில், நடந்த விழாவில், நால்வருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு 'கேல் ரத்னா' விருது வழங்கி கவுரவித்தார். அதேபோல், ஜோதி (தடகளம்), சலிமா, ஜர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், சஞ்சய் (ஹாக்கி), நவ்தீப் சிங், சிம்ரன், ஹொகாடோ, தரம்பிர், பிரனவ் சூர்மா, சச்சின் கிலாரி, தீப்தி ஜீவன்ஜி, பிரீத்தி பால் (பாரா தடகளம்), நிதேஷ் குமார் (பாரா பாட்மின்டன்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), அமன் ஷெராவத் (மல்யுத்தம்),
சாஜன் பிரகாஷ் (நீச்சல்), அபே சிங் (ஸ்குவாஷ்), சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே (துப்பாக்கி சுடுதல்), ருபினா, மோனா (பாரா துப்பாக்கி சுடுதல்), கபில் பார்மர் (பாரா ஜூடோ), ராகேஷ் குமார் (பாரா வில்வித்தை), வந்திகா (செஸ்), நித்து காங்கஸ், சவீட்டி (குத்துச்சண்டை) உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment