கர்ப்பிணிக்கு ரயிலில் பாலியல் தொல்லை.... கருவிலேயே உயிரிழந்த குழந்தை
திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ரயில் வேலூர் அருகே சென்றபோது கழிவறைக்கு சென்றுள்ளார்.அப்போது மது போதையில் இருந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கே.வி குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹோமராஜ் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் நான்கு மாத கர்ப்பிணியின் வயிற்றிலேயே குழந்தையின் இதயத்துடிப்பு நின்று விட்டது. தற்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் உயிரிழந்த சிசுவை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருவிலேயே சிசு உயிரிழந்ததால் பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனையில் கதறி அழுத சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்தது.
No comments