கொல்லங்கோடு : பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா நாளை துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்றான கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தும் போது, குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த வருடமும், தூக்கத் திருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இவ்விழாவுக்கு நாளை கேரளா மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைக்கிறார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக, மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக திருஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு சமய சொற்பொழிவு ஆற்றுகிறார். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு,.விஜய் வசந்த் எம் பி, கிளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் உள்பட்ட ஏராளமானவர் கலந்து கொள்கிறார்கள். இந்த திருவிழாவானது பத்து நாட்கள் நடைபெறும்.
No comments