இன்று இரவு முதல் காவல்துறையை தூங்க விடமாட்டேன்..... அண்ணாமலை சபதம்
தமிழக பாஜக கட்சியின் சார்பில் இன்று டாஸ்மாக் ஊழலை எதிர்த்து போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாஜக மூத்த தலைவர்கள் வீட்டிற்கு சென்று நேரடியாக அவர்களை கைது செய்தனர். டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட பேரணி செல்ல இருந்த பாஜகவினரை கைது செய்து ஒரு இடத்தில் அடைத்து வைத்த நிலையில் தற்போது அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
அதாவது நீண்ட நேரம் ஆகியும் போலீசார் விடுவிக்காததால் கோபத்தில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதாவது தமிழிசை சௌந்தர்ராஜன் நாங்களா நாடகம் ஆடுகிறோம் மாலை 6 மணிக்கு மேல் பெண்களை சிறையில் வைக்க கூடாது என்பது ரூல்ஸ் எங்களுக்கும் சட்டம் தெரியும் ஆனால் நீங்கள் இவ்வளவு நேரம் கைது செய்து வைத்திருப்பது தவறு என்று ஆவேசமாக வாக்கு வாதம்செய்த நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் ரூல்ஸ் படி லேடிஸ் மாலை ஆறு மணிக்கு மேல் சிறையில் வைக்க கூடாது என்பதால் இவ்வளவு நேரமாக ஏன் வைத்துள்ளீர்கள் என்று போலீசார் உடன் கடும் வாக்குவாதம் செய்தார்.
மேலும் 6:00 மணிக்கு மேல் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பெண்களை போலீசார் விடுதலை செய்த நிலையில் அண்ணாமலை கோபத்தில் எங்களுக்கும் ரூல்ஸ் தெரியும். நீங்கள் இவ்வளவு நேரம் சிறையில் வைத்து விட்டு இப்போது வந்து வெளியே விடுகிறீர்கள். நீங்கள் நாடகம் போடுகிறீர்கள் என்று கோபத்தில் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.அதன் பிறகு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை, இனி நமக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை தூங்கவே கூடாது. பொறுமையை சோதித்து விட்டதால் இன்றைக்கு இரவிலிருந்து நாங்கள் காவல்துறையை தூங்க விடமாட்டோம். மேலும் போலீசார் தூங்க முடியாத அளவுக்கு மே மாதம் வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
No comments