• Breaking News

    ஐ.பி.எல்..... நாளை களமிறங்குகிறார் பும்ரா.... மகிழ்ச்சியில் மும்பை அணி ரசிகர்கள்....


     10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஜனவரி 3-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது முதுகில் காயமடைந்தார்.

    காயம் தீவிரமாக இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் தவற விட்டார். இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமில் காயத்திலிருந்து மீண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

    இவர் இல்லாததால் நடப்பு சீசனில் மும்பை அணி 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதனால் இவரது வருகையை மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

    காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்த ஜஸ்பிரித் பும்ரா மும்பை அணியுடன் இனைந்துள்ளார். இருப்பினும் அவர் பெங்களூருக்கு எதிரான நாளைய போட்டியில் களமிறங்குவாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக இருந்தது.

    இந்நிலையில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவார் என்று மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே அறிவித்துள்ளார். இதனால் மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

    No comments