மது குடிக்க வைத்து 2 சிறுமிகள் பலாத்காரம்..... 3 பேர் கைது.....
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கழக் கூட்டம் பகுதியை சேர்ந்த 2 சிறுமிகளை கடந்த மாதம் 17-ந் தேதி சங்கு முகம் செறு வெட்டுக்காட்டை சேர்ந்த ஐபின் (வயது 19), குரியாத்தி சாலை பகுதியை சேர்ந்த அபிலாஷ் (24), பீமா பள்ளியை சேர்ந்த பைசல்கான் (38) ஆகிய 3 பேர் ஓட்டலில் சாப்பிட அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் மதுவை வாங்கிய அவர்கள் 2 சிறுமிகளையும் நைசாக குடிக்க வைத்துள்ளனர். இதில் போதையில் தள்ளாடிய 2 பேரையும் மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று மாறி, மாறி அவர்களை பலாத்காரம் செய்தனர். பிறகு 2 பேரையும் அங்கேயே போட்டு விட்டு தப்பினர். மயக்கம் தெளிந்த பிறகே 2 சிறுமிகளுக்கு தங்களுக்கு நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தங்களுக்கு நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனை கேட்ட பெற்றோர் துடிதுடித்து போனார்கள். மேலும் இதுகுறித்து தும்பா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments