இன்றைய ராசிபலன் 29-05-2025
மேஷம் ராசிபலன்
உங்கள் கடின உழைப்பு மற்றவர்களுக்கும்தெரியத்தொடங்கியுள்ளது. இது கண்டிப்பாக நல்லபலனைக்கொடுக்கும். வாழ்க்கை நீங்கள் நினைத்ததைவிடச்சிறந்தது என்று நீங்கள் உணர்கிறீர்கள். நீங்களே மிகவும் கடினமாக நபராக இருக்காதீர்கள். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். பல விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றன. இன்று, நீங்கள் சிறந்த புத்திசாலி போன்று செயல்படுவீர்கள். அதைஉங்களுக்குச்சாதகமாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு விருந்து தயாராக உள்ளது, எனவே அதற்குச் செல்லுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
பல விஷயங்கள் உங்களைப் பாதிக்கலாம். உங்கள் உணர்ச்சிகள் எல்லா இடங்களிலும் வெளிப்படலாம். மேலும், வாழ்க்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும். நீங்கள் தேர்வு செய்தவை மற்றும் முடிவெடுத்தவற்றை வெளிக்காட்டச் சிறிதளவில் நேரத்தைச் செலவிடுங்கள். இதன் மூலம், உங்களுக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்த கேள்விகளில் சிலவற்றுக்குப் பதில் கிடைக்கச் பெறுவதுடன், உங்களுக்குத் தேவையான தெளிவுகளைத் தரும். உங்கள் மனதைக் கவலையடையச் செய்யும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை பெறவும். உங்களை விரும்புவாரால் மட்டுமே உங்களுக்காகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும்.
மிதுனம் ராசிபலன்
நீங்கள் ஒரு பயணத்திற்குச் செல்ல நினைத்தால், வேறு எதையாவது யோசித்துப் பார்க்காதீர்கள். அன்றைய உங்களது நாள் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான தருணங்களால் நிரப்பப்பட வேண்டும். மேலும், அது உங்களுக்கு உண்மையிலேயே பயன்தரும். கவலையாக இருப்பதாக உணர்கிறீர்களா? உங்கள் உடல்நலம் தான் உங்களை அவ்வாறு உணரவைக்கிறதா? அல்லது உங்களின் இதயத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் ஏதேனும் ஒன்று உங்களை அவ்வாறு உணரவைக்கிறதா? உங்களது உடல்நலப் பிரச்சினைகள் உங்களை கவலையடையச் செய்தால், விரைவில் மருத்துவ உதவியை நாட முயற்சி செய்யுங்கள்.
கடகம் ராசிபலன்
கடின உழைப்பு மிகுந்த பலனளிக்கும். எந்த நேரத்திலும் அதன் முடிவுகளை நீங்கள் காண்பீர்கள். உங்களை நீங்களே நிதானமாகப் மாற்றிக் கொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதை நீங்கள் வரமாகவே பெற்றுள்ளீர்கள்! உங்களுக்குரிய பயணம் மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புகள் விரைவில் அமையும். அதைச் செயல்படுத்த, சிறந்த முடிவுகளை எடுங்கள். உங்கள் மனதின் எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த விடவேண்டாம். தேவைப்பட்டால், நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.
சிம்மம் ராசிபலன்
உங்கள் மனதுக்கும், உடலுக்கும் பிரத்தியேக கவனம் தேவை. ஆனாலும், உங்கள் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் உங்கள் பாக்கெட்டை காலி செய்யும் செலவுகளைச் செய்வதில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உங்களை நேசிப்பவர்கள் இன்று உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள். மேலும், அவர்கள் உங்களை நேசிப்பதையும், அவர்கள் உங்களைப் பாராட்டுவதையும் நீங்கள் உணருவீர்கள். உங்கள் திறமையை அதிகரித்துக் கொள்ளக் கூடிய புத்தகங்களைப் படியுங்கள். ஏனென்றால் உங்களுக்கு மிக விரைவில் உயர் பதவி கிடைக்கலாம். உங்கள் மீது அக்கறை கொண்டு நீங்கள் வாழ்வில் முன்னேற வாழ்த்தும் நபர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். செய்ந்நன்றி மறத்தல் கூடாது.
கன்னி ராசிபலன்
நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. நீங்கள் உங்களது உடலில் தோன்றும் அறிகுறிகளைக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள அறிகுறிகளைக் காண இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நெருங்கிப் பழகுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களுக்கு நன்மை நடக்கும் நாட்களிலும் உடனிருந்தவர்கள் ஆவர். உங்களுக்கு உண்டாகும் அவநம்பிக்கையான அணுகுமுறையை ஒதுக்கி வைத்து விட்டு நல்ல விஷயங்களை நம்புங்கள்.
துலாம் ராசிபலன்
உங்கள்பிரச்சனையைத்தீர்க்கும் திறன் இன்றுசிறப்பாகச்செயல்படத் தொடங்கும். உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். பணியில் உங்களது ஆர்வம் உச்சத்தில் உள்ளது. உங்கள் காதல் ஆர்வத்தைப் பற்றி மேலும் அறிய இந்த நாளைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்கள் மனத்தை முழுமையாக ஈடுபடுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயமாக வரும். இந்த வாரம் உங்கள் படைப்பாற்றலைஉச்சத்திற்குக்கொண்டு செல்லலும்.
விருச்சிகம் ராசிபலன்
உங்களிடம் ஒரு அற்புதமான குணம் உள்ளது. அது யாதெனில், இருண்ட அறையிலிருக்கும் ஒரு மனிதரின் முகத்தில் கூட புன்னகையை உங்களால் வரவழைக்க இயலும். இன்று, இதை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துங்கள். உங்களது வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறது. நிறைய சமயங்களில், உங்களது வார்த்தைகளின் உண்மையான தாக்கத்தை நீங்கள் உணரத் தவறிவிட்டீர்கள். ஆனால், உங்களது நன்மைக்காக இதை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பதை சமீபத்திய சம்பாஷணை உணர்த்தியுள்ளது. கவலையான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது, உங்களை மிகவும் இலகுவாக உணரச் செய்யும். ஆனாலும், உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு யார் நம்பகமானவர் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
தனுசு ராசிபலன்
இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும் கவனச்சிதறல்களால் உங்கள் பணி சற்று பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆகவே, அதைச் சரி செய்ய இன்று முதல் முயற்சி செய்யுங்கள். உண்மையில் எந்த செயலில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நீங்கள் பல திறமை வாய்ந்தவர் என்பது உண்மைதான் என்றாலும், உங்கள் வெற்றிக்கான தடைகளைக் கண்டுபிடித்து, அவற்றை மேம்படுத்த மட்டுமே உங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிடுங்கள்.
மகரம் ராசிபலன்
அதிர்ஷ்டம் உங்கள் பக்கமாக இருப்பதால், உடனடியாக செயலில் ஈடுபடுங்கள். உங்களது யோசனைகளைக் கொண்டு, தொழில்முறையில் முன்னணியில் உள்ளோருக்காக குரல் கொடுங்கள். அவர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவர். உங்களை அதிக உயரத்திற்கு கொண்டு செல்லும் விஷயங்களுக்காக, உங்கள் ஆற்றலைச் செயல்படுத்துங்கள். நீங்கள் கலக்கத்தில் இருப்பதாக உணரும் போது, உங்களது நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் விஷயங்களை சிறப்பாக முன்னெடுக்க உதவுவார்கள். இன்று, அவர்களுக்கு சற்று அன்பைக் காட்டுங்கள். உங்களது பாராட்டுதல்களை வார்த்தைகளால் தெரிவியுங்கள்.
கும்பம் ராசிபலன்
ஒரு நேர்மறையான நபரான நீங்கள், ஏதாவது ஒன்றை இழப்பதை உண்மையிலேயே வெறுக்கிறீர்கள். வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும், நீங்கள் சிலசமயம் வெற்றி பெறுகிறீர்கள். சிலசமயம் தோல்வியுறுகிறீர்கள்! உங்களது வெற்றியோ அல்லது ஏதாவது ஒன்றை செயல்படுத்தும் உங்கள் செயலோ, உங்கள் திறன்களை தீர்மானிக்க விடவேண்டாம். உங்கள் ஆற்றலும், அழகும் இன்றைய சிக்கல்களை சரிசெய்ய உதவும். ஒருவேளை, நீங்கள் இதனை கடுமையாக எடுக்காவிட்டாலும், நீங்கள் இருதரப்பினருக்கு இடையே ஒரு மத்தியஸ்தராக செயல்பட வேண்டியிருக்கும். கவலை உண்மையில் உங்களை மென்மேலும் பயமுறுத்தியுள்ளது. எப்போதும் உங்கள் உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். அதிகம் கவலைப்படுவதற்கும் அதன் மூலம் உங்கள் நாட்களை இழப்பதற்கும் பதிலாக, எந்த செயல்கள் நடந்தாலும் அவற்றைக் அதன் வழியிலே கையாள்வதைத் கற்றுக்கொள்ளுங்கள்.
மீனம் ராசிபலன்
துரதிர்ஷ்டவசமான செயல்கள் உங்கள் பக்கமாக நகரும் என்பதால் ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நேர்மறையாக இருங்கள், முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதற்கேற்ப முடிவு செய்யுங்கள். ஆனால், தேவையற்ற உணர்ச்சிகளை மறைத்து வைத்திருங்கள், ஏனென்றால் நீங்கள் இப்போது செய்யும் எந்தவொரு செயலையும் அவை தடுத்துவிடும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள், அவற்றை நோக்கிச் செயல்படுங்கள். சுயநலக்காரர்களிடம் பேசுவதை விட்டு விடுங்கள். ஏனெனில், அவை எதிர்மறை மற்றும் சோகத்தைத் தவிர வேறொன்றையும் ஏற்படுத்தாது.
No comments