செங்கல்பட்டு: +2 பொதுத் தேர்வில் சாதனை படைத்த சீயோன் குழுமப் பள்ளி மாணவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம்,சேலையூர், மாடம்பாக்கம் மற்றும் செம்பாக்கம் சீயோன் பள்ளிகளில் தேர்வெழுதிய 941 மாணவர்கள் அனைவரும் முதல் வகுப்பில் 100 % தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளனர். இதில் சேலையூர் பள்ளி மாணவி ஆர்.சாதனா தமிழ் 97, ஆங்கிலம் 100, இயற்பியல் 100, வேதியியல் 100, கணிதம் 100, உயிரியல் 100, மதிப்பெண்களுடன் மொத்தம் 597/600 பெற்று சாதனைப்படைத்துள்ளார்.
சீயோன் பள்ளி சேலையூரில் எழுதிய 536 மாணவர்களில் 87 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் அதில் மாணவி முகிலரசி 595/600 மதிப்பெண்கள் பெற்று சாதனைப்படைத்துள்ளார் சீயோன் பள்ளி மாடம்பாக்கத்தில் எழுதிய 235 மாணவர்களில் 25 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் அதில் மாணவி சாய் கமலதர்ஷினி -595/600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
சீயோன் மற்றும் ஆல்வின் குழுமப் பள்ளிகளின் தலைவர் டாக்டர் என்.விஜயன் மற்றும் பள்ளி முதல்வர்கள் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கிப் பாராட்டினர்.
No comments