• Breaking News

    பம்மல் வடக்கு பகுதி சார்பில் மதிமுகவின் 32ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கழக கொடியேற்றி வைத்து நலதிட்டஉதவி, தாகம் தீர்க்கும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது


    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பம்மல் வடக்கு பகுதி சார்பில்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 32ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கழக கொடியேற்று விழா செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் தலைமையில் முதல் இடமாக அவருடைய இல்லத்தில் கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்கள்.

    அதனை தொடர்ந்து பம்மல் வடக்கு பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல், பம்மல் வடக்கு பகுதி அவைத் தலைவர் பிரேம் குமார், பகுதி பொருளாளர் ராமையா, பகுதி துணை அமைப்பாளர் சீதாலட்சுமி, 29வது வட்ட கழக செயலாளர் தானு, முன்னாள் வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி மகேந்திரன்  அவர்களின் ஏற்பாட்டில் இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் கலந்துகொண்டு பொது மக்களுக்கு புடவை தர்பூசணி மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள்.

    அதைத் தொடர்ந்து பம்மல் வடக்கு பகுதி சார்பில் 20க்கு மேற்பட்ட இடங்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் இல்லாத்தில் விடு விடாக சென்று கழக கொடி ஏற்றி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வி.ஆறுமுகம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பி.சுந்தரமூர்த்தி, பகுதி துணை அமைப்பாளர் ஜே.பிரகாஷ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    No comments