• Breaking News

    திருப்பத்தூர்: பல் சிகிச்சையில் பாக்டீரியா தொற்று..... 8 பேர் பலி

     


    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2023ஆம் ஆண்டில் தனியார் பல் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவர்களை கொண்ட குழு விசாரணை நடத்தியது.

    இந்த நிலையில் இது தொடர்பான விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பல் கிளினிக்கில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

    பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமல், ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியதால் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments