• Breaking News

    கருணாநிதி பிறந்த தினத்தை யொட்டி பாவூர்சத்திரத்தில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி..... முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் தொடங்கி வைத்தார்.....


    கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி பாவூர்சத்திரத்தில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டியை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தின விழா, பாவூர்சத்திரம் விளையாட்டு குழு தொடக்க விழா மற்றும் தொழிலாளர் நல தின விழாவையொட்டி பாவூர்சத்திரம் விளையாட்டு குழு நடத்தும் முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஒரு நாள் மின்னொளி கபடி போட்டி பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரத்தில்   நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் வகித்தார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சீனித்துரை வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் பேசினர்.

    முதல் விளையாட்டு  போட்டியை முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட திமுக அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் காசிதர்மம்துரை, ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் தங்கசெல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்ஷீலா பரமசிவன்,  சொள்ளமுத்து மருதையா,முருகன், ஒன்றிய துணை செயலாளர் டால்டன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், தொண்டரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன்,  மாணவரணி துணை அமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி, கபில்தேவதாஸ், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி தலைவர் காளியம்மாள் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பொன்னரசு, ராஜபாண்டி, ஏ.பி.என்.குணா, அன்பழகன், மோகன்ராஜ், வேல்அய்யப்பன், தளபதி விஜயன், முருகன், ராஜேந்திரன், பெரியார்திலிபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை விளையாட்டு குழு நிர்வாகிகள் தலைவர் வைரசாமி, செயலாளர் மாஸ்டர் கணேஷ், பொருளாளர் ஆல்வின்ராஜா, துணைத்தலைவர் முருகன், துணை செயலாளர் அரிகிருஷ்ணன், விளையாட்டு குழு  ஒருங்கிணைப்பாளர்கள் சிரில்பீட்டர், சிவஅருணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    No comments