• Breaking News

    நாகூரில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் திருவிழா தேர் பவனி சிறப்பான முறையில் நடைபெற்றது


    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் திருவிழா    அருட்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

    பத்து நாட்களாக நடைபெற்ற திருவிழாவில் இறுதி நாளான நேற்று இரவு திருத்தேர் பவனி வேளாங்கண்ணி அதிபர் இருதயராஜ் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்று மிக்கல் சம்மனசு, குழந்தை இயேசு அதனைத் தொடர்ந்து புனித பாத்திமா அன்னை  தேர் பவணி வானவேடிக்கையுடன் ஊர்வலமாகச் சென்று  நாகூரில் உள்ள நான்கு வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை அடைந்தது.

     அதனைத் தொடர்ந்து நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது காஜி ஹுசைன் சாஹிப், நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நாகூர் சித்திக், சித்தர் பீடம் அறங்காவலர் ராஜசரவணன்.நாகூர் தர்கா ஆதினம் தமீம் அன்சாரி சாஹிப் மத நல்லிணக்கம் மாறாமல கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கீழ்வேளூர் செய்தியாளர் த.கண்ணன் 

    No comments