புளியம்பட்டி ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி , தூ.நாயக்கன்பாளையம் ஒன்றியம் , புளியம்பட்டி ஊராட்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை 8இலட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் அமைத்திட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூ.நாயக்கன் பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன் ,ஈரோடு வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கிருபாகரன் , வெற்றி ,வட்டார வளர்ச்சி அலுவலர் பூபதி , இந்திராதேவி , உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments