• Breaking News

    கும்மிடிப்பூண்டி: நத்தம் ஊராட்சியில் ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்


    கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் ஊராட் சியில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் மற்றும் அங்காளம்மன் கோயில் கள் உள்ளன. இந்த கோயி லுக்கு.பெரியநத்தம், சின்ன நத்தம், ராஜாபாளையம், காரமணிமேடு, கோட் டக்கரை ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலை யில், பொன்னியம்மன், அங்காளம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 7.ம் தேதி பந்தக்கால் நிகழ்வுடன் தொடங்கியது.  கணபதி ஹோமம், தன பூஜை, பூர்ணாஹுதி, 8.ம் தேதி வாஸ்து சாந்தி, இரண் டாம் கால யாகசாலைபூஜை. தீபாராதனை பிரசாதம், பூர்ணாஹுதி, 9ம் தேதி நான்காம் கால யாக சாலை பூஜை, மஹா பூர் ணாஹுதி உள்ளிட்ட பல் வேறு பூஜைகள் நடந்தது.

    இதனைத் தொடர்ந்து. நேற்று கோயில் கும்பாபி ஷேகம் நடந்தது. முரளி, சம்பத் பட்டாச்சாரி யார்கள் யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து இரண்டு கோயில்களில் ராஜகோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட் டது. தொடர்ந்து, பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந் துகொண்டு அம்மனை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெறும் என தெரிவித்தனர்.

    No comments