• Breaking News

    கோவை எல்லை கருப்பராயர் கோயிலில் சிறப்பு பூஜை - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு


     கோவை எல்லை கருப்பராயர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்தர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

    கோவை மாவட்டம் பிளிச்சி கிராமம், ஒன்னிபாளையம் பகுதியில் எல்லை கருப்பராயன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் 18 சித்தர்களையும் ஒரே கல்லில் கொண்ட 18 அடி உயரத்தில் கோயில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

    இந்நிகழ்வில், சினிமா நடிகை மீனா, சினிமா நடன இயக்குநர் கலா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கோயிலுக்கு வருகை தந்த ஆளுநருக்கு நிர்வாகத்தினர் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.

    No comments