• Breaking News

    சென்னையில் தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து மாவீரன் குணாளன் நாடாருக்கு மணி மண்டபம் அமைக்க பொன் விஸ்வநாதன் நாடார் கோரிக்கை

     


    ஈரோடு மாவட்டம் ,  சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் சு. முத்துசாமி, முத்தூர் சாமிநாதன், அன்பில் பொய்யாமொழி, கீதா ஜீவன் , அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ. ஜி. வெங்கடாசலம் மற்றும் முதல்வரின் தனிபிரிவு செயலாளர் ஆகியோரை நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார்  நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து கொங்கு நாட்டு மாவீரன் குணாளன் நாடாருக்கு அரசு விழா  அறிவித்து மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தனர். 

    நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கலந்துரையாடல் செய்த பிறகு உறுதியாக உங்களது கோரிக்கையை ஏற்கப்பட்டு விரைவில் அரசு விழா அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பெருமக்கள் உறுதி கொடுத்தனர். அவ்வாறு அரசு விழா அறிவிக்கும் பொழுது ஈரோட்டில்  முதல்வர் அவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில்  விழாவிற்கு வரவழைத்து  நாடார் சமுதாயத்தின் சார்பாக 10,000 பேரை திரட்டி நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார் . 

    மேலும் கொங்கு மண்டலத்தில் நாடார் சமுதாயத்திற்கு அரசியல் அதிகாரம், கள்ளுக்கான தடை நீக்குதல், சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து நாடார் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு, பனைமரம் ஏறும் தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்துதல், வேலையில்லாத ஆறு மாத காலத்திற்கு மதிப்பு ஊதியம் வழங்குதல் மற்றும் நாடார் கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களுக்கு சாதிப் பெயரை பயன்படுத்தக்கூடாது என்ற தடையை அரசு மேல்முறையீடு செய்து  அதை தடுக்க வேண்டும் என்றும்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் வழங்கி உள்ள்ளதாக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் தெரிவித்தார். 

    மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் கவின் சங்கர் நாடார், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் இளங்கோ நாடார், மாநில உயர்மட்ட குழு ஆலோசகர் ரயில்வே ரஞ்சித் நாடார், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் நாடார் மாவட்டம் பொருளாளர் செந்தில் நாடார்,ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் கொங்கு தம்பி நாடார், விருதுநகர் மாவட்ட செயலாளர் கொய்யா பாண்டி (எ ) பாண்டீஸ்வரன் நாடார் ஈரோடு தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் அருணாச்சலம் நாடார் தகவல் தொழில் நுட்ப அணி துணைச் செயலாளர் சக்திவேல் நாடார், ஈரோடு ஒன்றிய தலைவர் கேபிள் ஈஸ்வரன் நாடார்,மொடக்குறிச்சி ஒன்றிய துணைத் தலைவர் பூவை வடிவேல் நாடார் பெருந்துறை ஒன்றிய துணைத் தலைவர் கே எஸ் ஆறுமுகம் நாடார் நம்பியூர் ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி நாடார், அந்தியூர் ஒன்றிய நிர்வாகி ராசு நாடார், ஆகியோர் கலந்து கொண்டனர். 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments