இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மக்களுக்கான மக்கள் இயக்கம் இணைந்து நடைபெற்ற முழு நாள் ஆன்மீக நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மக்களுக்கான மக்கள் இயக்கம் சமூக ஆர்வலர்கள் அமைப்புகளின் கூட்டமைப்பு 24.04.2025 வியாழக்கிழமை அன்று குரோம்பேட்டை வசந்த மண்டபத்தில் யந்திராலயம், மக்களுக்கான மக்கள் இயக்கம், னஸ்தாபகர் தலைவர் யந்திராலய நாணல் குருஜி சக்தி ஸ்ரீ வீரமணி சுவாமிகள் தலைமையில், மக்களுக்கான மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரும், அனைத்திந்திய இந்து திருக்கோயில் பாதுகாப்பு சங்க மாநில துணைச் செயலாளருமான குருஜி பக்தன் முனைவர் தி.கார்த்திக் கண்ணன் அவர்கள் ஏற்பாட்டில் அனைத்து மக்கள் நலன் கருதி நடைபெற்ற முழு நாள் ஆன்மீக நிகழ்ச்சியில் ஐந்து பிரார்த்தனைகளை முன் வைத்து ஒன்றாவதாக வரும் இயற்கை சீற்றத்தை தடுக்க அக்னி புருஷ பூஜை, ஆன்மீகம் தழைக்க, +2, 10வது பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற, விசுவாவசு வருஷம் குழந்தைகள் உடல் நலம் மேம்பட, சமூக ஆர்வலர்கள் பொதுச் சேவையில் வெற்றி பெற சிறப்பு யாகம் பூஜை, குரு பாத பூஜை, குரு விளக்கு பூஜை, பஜனை, பண்பாட்டு கலை நிகழ்ச்சி, நீர் மோர் விநியோகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
இதில் மூத்த குடிமக்கள் நல சங்க தலைவர் நீர்நிலை காப்பாளர் எஸ்.மீனாட்சிசுந்தரம் அவர்கள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக குருஜி பரம்பரை வழி சிஷ்யர் யந்திராலய வி.ஸ்ரீதர் அவர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் சுதா சேஷயன், அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்க தேசிய தலைவர் அருள்வேலன், காமதேனு தொண்டு அறக்கட்டளை ட்ரஸ்டி பி.சங்கர் ஜி, ஆர்.எஸ்.எஸ் தங்க சாலக் திருநீர்மலை குரோம்பேட்டை ஏ.எஸ்.நரேந்திரன் ஜி, பி.அனந்த ராமன், செளமி நாராயணன், விநாயகா பில்டர்ஸ் ஸ்ரீனிவாசன், ஆடிட்டர் சிவராமன், கே.விஜயலட்சுமி, சித்ரா, ஜெயா, முகுந்த ராவ், எஸ்.எம்.கோவிந்தராஜன், டாக்டர் வி.சந்தானம், டி.ராதாகிருஷ்ணன், தியாகராஜன், பிரகலாதன், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குருஜி பக்தர்கள் திரு எஸ்.கே.நாகராஜன், விபி பாலாஜி, செல்வி கே.ஜெயா, வழக்கறிஞர் பி.தாமோதரன், வழக்கறிஞர் வெற்றி சரவணன், சென்னை கேப்ஸ் புருஷோத்தமன் மற்றும் பல்லாவரம் துணை வட்டாட்சியர் எம்.தேவேந்திரன், சிட்லபாக்கம் காவல் உதவி ஆய்வாளர் கந்தவேல், மக்களுக்கான மக்கள் இயக்கத்தின் தன்னார்வலர்கள் சமூக செயற்பாட்டாளர்களான ழிஎல்டி.ஆர்.கிருஷ்ணன், ஆர்.கே.துளசிதரன், என்.சந்தோஷ் குமார், HM ரியாஸ் அகமது மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் அரசுக்கு கொடுக்கப்பட்ட கோரிக்கைகளில் தாம்பரம் மாநகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 9 மாதங்களாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்த நகர்ப்புற சுகாதார நல வாழ்வு மையங்களை அரசும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கும், பல்லாவரம் வட்டத்துக்குட்பட்ட அஸ்தினாபுரம், குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, மாணிக்கம் நகர், பல்லாவரம், கீழ்கட்டளை, பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை போன்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரியதை அரசு ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டா வழங்கிய வருவாய்த் துறைக்கும் பல்வேறு இடங்களில் குண்டும் குழியும் ஆக இருந்த சாலைகளை அமைக்க கோரியதை ஏற்றுக் சாலைகளை அமைத்து தந்தமைக்கும், மூத்த குடிமகன் VLT ஆர்கிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பெயரில் தாம்பரம் மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் விசாரணை கமிஷன் அமைத்ததற்கும், தமிழ்நாடு முழுவதும் ஓராண்டுக்கு மேலாக நிலுவையில் வைக்கப்பட்ட ஒன்பதரை லட்சம் ரேசன் குடும்ப அட்டைகளை உடனடியாக வழங்க கோரியதை ஏற்று ரேசன் குடும்ப அட்டைகளை வழங்கியதற்கும், இது போன்று மக்களுக்கான மக்கள் இயக்கம் சமூக ஆர்வலர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு ஏற்று மக்கள் நலன் கருதி செய்து முடித்துக் கொடுத்த துறை நிர்வாகத்திற்கு, அரசுக்கும் மக்களுக்கான மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தி.கார்த்திக் கண்ணன் அவர்கள் நன்றி கலந்த பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments