• Breaking News

    நாகை அருகே சித்ரா பௌர்ணமி பெருவிழாவை முன்னிட்டு ரத காவடி ஊர்வலத்துடன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா


    முருகனின் ஆதிபடைவீடு என அழைக்கப்படும் நாகை மாவட்டம்  எட்டுக்குடியில் அமைந்துள்ள  ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்   சித்ரா பௌர்ணமி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு திருவிழா  கடந்த மே.3 ஆம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் 4ஆம்  நாளான மே.6  வெள்ளி ஆட்டுகிடா வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சிங்காரவேலவர் எழுந்தருளினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனைக்கு பின்னர் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. ரதக்காவடி ஊர்வலத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்ற வீதியுலா புறப்பாட்டின் போது வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர். ஏராளமான இளைஞர்கள் ரதக்காவடியை  சுமந்தபடி உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.


    விழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் மே 11ஆம் தேதியும்,60 மணி நேரம் இடைவிடாது பாலபிஷேகம் நடக்கும் சிறப்புக்குரிய  சித்ரா பௌர்ணமி காவடி அபிஷேகத்தில்   மே 12 ஆம்  தேதியும்  நடக்க உள்ளது.

    நான்காம் நாள் இரவு வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலாவிற்கான உபய  ஏற்பாடுகளை திருக்குறிப்புத் தொண்ட நாயனார் வம்சத்தினர் செய்திருந்தனர் .

    கீழ்வேளூர் நிருபர் த.கண்ணன் 

    No comments