டிஎன்பிஎல் கிரிக்கெட் 2025: கோவை - மதுரை அணிகள் இன்று மோதல்
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இதுவரை 7 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன.
இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் ஒரு ஆட்டத்தில் ஆடி தோல்வி கண்டுள்ளன. இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.
No comments