நாகை: நாலு வேதபதி புகழ் பெற்ற சிவன் கோவிலில் வைகாசி விசாக ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நான்கு வேதங்கள் என போற்றப்படும் நாலுவேதபதி அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அமராதீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ முருக பெருமானுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு நாலுவேதபதி சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர் பொதுமக்கள் சார்பாக பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சிறுமி சிறுமியர் கோலாட்டம் நிகழ்ச்சியுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது .
அதனை தொடர்ந்து.ஆலய வளாகத்தில் சிறுவர் சிறுமியர் வண்ணஆடைகள் அணிந்து கோலாட்ட நிகழ்ச்சியும் ,பெண்கள் கும்மி கோலாட்ட நிகழ்ச்சியும், காவடி ஆட்டம் போன்ற நிகழ்ச்சியும் .வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுற்றவட்டார பக்தர்களுக்கு அன்னதானம்.மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது .இந்நிகழ்ச்சியினை ஊர் கிராமவாசிகள். மற்றும் பக்த கோடி மெய்யன்பர்கள் ஏற்பாடு செய்துள்னர்என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி
No comments