பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு வேங்கடமங்கலம் பகுதியில் மதியம் உணவு வழங்கப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கடமங்கலம் சத்யா நகர் பகுதியில் ஜூன் 4ல் பிறந்தநாள் விழா காணும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ரகுராமன் அவர்களின் ஆலோசனைப்படி பட்டியல் அணி மாநிலச் செயலாளர் நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யா தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு வடக்கு அமைப்புசாரா மாவட்ட தலைவர் எம்.வினோத், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மகளிர் அணி தலைவர் விஜயலட்சுமி சூர்யா, விளையாட்டு மற்றும் திரன் மேம்பாட்டு அணி தலைவர் சக்திவேல், மற்றும் பட்டியில அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.
No comments