ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், குப்பாண்டம் பாளையம் ஊராட்சி, குப்பாண்டம் பாளையம் பகுதியில்,45 இலட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டிட கட்டுமான பணிகளுக்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் , அந்தியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் , ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அத்தாணி பிரகாஷ் , முன்னாள் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியம் , இளைஞர் அணி துணை அமைப்பாளர் அங்கமுத்து , தர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment