• Breaking News

    சென்னை: விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு

     


    சென்னை விமான நிலையத்தின் மீது கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் இரவு நேரங்களில் லேசர் ஒளி அடித்து விமான சேவைக்கு இடையூறு அளித்து வருகின்றனர்.

    குறிப்பாக கடந்த சில நாட்களுக்குமுன் துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கியபோது விமானத்தின்மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால், விமான தரையிறக்கத்தின்போது விமானி சற்று தடுமாறினார்.

    இந்நிலையில், மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானத்தின்மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால், விமானி அதிர்ச்சியடைந்தார். பின்னர், சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பரங்கிமலை, கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments