திருக்குவளை அருகே திருவாசல் ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமி கோயில் குடமுழுக்கு நடைபெற்றது
நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம், திருவாய்மூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவாசல் பகுதியில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அப்பகுதி பொது மக்களால் வணங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட முனீஸ்வர சுவாமி கோயிலில் அந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்நபன ஹோமத்துடன் கூடிய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடத்துப் புனித நீர் கொண்டு சிவலிங்கம் மற்றும் முனீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் மலர்களால் அலங்கரித்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
குடமுழுக்கு நிகழ்வில் ஈரோடு பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் இராமதாஸ், மணக்குடி கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் நாகராஜன், கீழையூர் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன், உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் திருவாய்மூர்,தென்கரை ஈசனூர்,திருவாசல்,ஆலங்குடி குலதெய்வம் வழிபாடு உறவு முறைகள் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன்
No comments