மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பொதுநலன் கோரிக்கை மனு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்தை இன்று 16.06.25 சமூக செயற்ப்பாட்டாளரும் விசிக (இசபே) மாநில துணைச் செயளாலருமான ஆயப்பாடி முஜிபுர்ரஹ்மான் ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து பொது மக்கள் நல கோரிக்கை மனுவை அளித்தார்.
.கோரிக்கை மனுவில் கீழ்கண்ட
1,மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையான பெரியார் மருத்துவ மனையில் போதிய மருத்துவ வசதி மருத்துவர்கள் இல்லாதததால் அவசர சிகிச்சை பெற வருபவர்கள் பயிற்ச்சி டாக்டர்களால் போதிய மருத்துவம் பார்க்க முடியாமல் தொடர் உயிரிழப்புகள் நடந்து வருவதால் உடனடியாக போதிய நவீன கருவி மருத்துவ உபகரணங்கள் வைக்க வேண்டியும், கூடுதல் மருத்துவர்களை நியமித்து முழுநேரமும் மருத்துவ மனையில் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டியும், சுத்தம் சுகாதாரமாக அரசு தலைமை மருத்துவ மனை இருக்க வேண்டியும் ஆட்சியர் மருத்துவ மனையை வாரம் இரு முறையாவது ஆய்வு செய்ய வேண்டியும் கோரினார்,
2, தரங்கம்பாடி வட்டம் ஆயப்பாடி மெயின்ரோட்டில் உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை புதிய கட்டிடம் கட்டி விரிவுபடுத்தி ஆயிரக்கணக்கான பகுதி மக்களின் நலன் கருதி ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவ மனையாக முழு நேரம் மருத்துவர்களுடன் இயங்க வேண்டியும் கோரினார்.
3, கோரோனா உள்ளிட்ட கொடிய உயிர் கொல்லி நோய்கள் பரவாமல் இருக்க வீடு வீடாக சென்று மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு செய்ய வேண்டியும்,
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் கிராம பஞ்சாயத்து பகுதிகள் பொது இடங்களில் பிலீச்சிங் பவுடர் அடித்தும் சுத்தம் சுகாதாரமாக இருக்க நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து விபராமக எடுத்து கூறினார்.
No comments