• Breaking News

    குற்றாலத்தில் எக்ஸ்னோரா சார்பில் மரக்கன்றுகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது


    தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா சார்பில் குற்றாலம் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ள நிலையில் குற்றாலத்திற்கு வருகை தரும்  சுற்றுலாப் பயணிகளுக்கு  தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா  அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள்  வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா செயலாளர் ப.சங்கர நாராயணன் தலைமை வகித்தார். குற்றாலம்  ஐ.ஒ.பி வங்கியின் மேலாளர்  உமாதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குற்றாலம்  வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு  மரக்கன்றுகள்  வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில்  300 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளுக்கு  மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா  நிர்வாகிகள்  ராசிசுரேஷ்  முருகையா,  துரை மீனாட்சி நாதன்  ஆகியோர்  செய்திருந்தனர். முடிவில்  தென்காசி சிட்டி எக்ஸ்னோரா  தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    No comments