கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற ரவுடி கழுத்தறுத்து கொலை
மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சிவமணி. அவர் தனக்கு கீழ் உள்ள ரவுடிகளை இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரவுடி சிவமணியை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டிய கூட்டாளிகள், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று போதையில் இருந்த சிவமணியை காருக்குள் வைத்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments