நீலகிரியில் கனமழை காரணமாக முக்கிய சுற்றுலா தலங்கள் மூடல்.....
நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இன்று நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் , நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக உதகை அருகே உள்ள அவலாஞ்சி, பைன் மரக்காடு மற்றும் 8வது மையில் டீ பார்க் ஆகிய 3 சூழல் சுற்றுலா மையங்கள் இன்று ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. விடுமுறை தினமான இன்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மற்ற சுற்றுலா தலங்கள் வழக்கம் போல திறந்து இருந்தன.
No comments