தென்காசி மாவட்டம் ஒண்டிவீரன்; 254வது வீரவணக்க நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்த தினத்தையொட்டி தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் ஆக.20ல் நடைபெறும் ஒண்டிவீரன் 254-வது வீரவணக்க நிகழ்ச்சி மற்றும் செப்.1ல் நெல்கட்டும் செவல் கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் 310-வது பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளுர், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் வருகைத் தரும் பொதுமக்கள், சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொள்வர். இதையொட்டி தென்காசி மாவட்டம் முழுமைக்கும் ஆக.18ந்தேதி மாலை 6.00 மணி முதல் 21ந்தேதி காலை 10.00 மணி வரையும், ஆக.30ந்தேதி மாலை 6.00 மணி முதல் செப்.2ந்தேதி 02.09.2025 காலை 10.00 மணிவரையும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்நேரத்தில் அனைவரும் கூட்டமாக செல்லாமல் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிருவாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment