• Breaking News

    கணக்கப்பிள்ளை வலசையில் ரூ.19 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டிடம்..... எம்எல்ஏ திறந்து வைத்தார்.....


    கணக்கப்பிள்ளை வலசையில்  ரூ 19 லட்சம் செலவில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ திறந்து வைத்தார்.


    தென்காசி ஊராட்சி ஒன்றியம், கணக்கப்பிள்ளைவைசை  ஊராட்சி இந்திரா காலனி பகுதியில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி மூலம் ரூ.19 லட்சம் செலவில்  கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமஜெயா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கே.வேம்பையா வரவேற்றார்.


    கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கலந்து கொண்டு பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார்.  தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் பொய்கை சோ. மாரியப்பன், மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வல்லம் எஸ் ஆர் ராமச்சந்திரன், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராமசாமி, அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் வேம்பு ரவி, மாவட்ட பிரதிநிதி பேச்சிமுத்து, கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முகம்மது இஸ்மாயில், புன்னைவனம், கணேசன், வளர்மதி, ராஜலட்சுமி, ரமேஷ், சண்முகத்தாய், இசக்கியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    No comments