2-வது மாநில மாநாடு..... மாநாட்டு திடலில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் ஏன்.? தவெக விளக்கம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 20, 2025

2-வது மாநில மாநாடு..... மாநாட்டு திடலில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் ஏன்.? தவெக விளக்கம்

 


விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் அக்கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீதம் உள்ள பணிகளை ஏற்பாட்டு குழுவினர் இரவு, பகலாக செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களுடன் விஜய் இருப்பது போன்ற படங்கள், மேடையின் உச்சியில் இடம்பெற்றுள்ளன. மாற்றுக்கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தமிழக வெற்றிக் கழகம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்தது.


இந்த கேள்விக்கு தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அண்ணாவும், எம்ஜிஆரும் பொதுவான தலைவர்கள் என்பதால் படத்தை பயன்படுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment