கடையநல்லூரில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணைய முறைகேடுகளையும், பாஜகவுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டத்தின் சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், அப்துல் பாசித் ,புளியங்குடி பிலால், பீர் மைதீன், வடகரை செய்யது அலி மருத்துவ அணி செயலாளர் அப்துல்லா குட்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலச் செயலாளர் முகம்மது ஒலி கோஷங்களை எழுப்பினார் மாநிலச் செயலாளர் அன்சாரி கண்டன உரையாற்றினார் டவுன்கிளை தலைவர் இஸ்மாயில் , மதினா நகர் தலைவர் பாதுஷா, பேட்டை கிளை தலைவர் நல்லூர் சுலைமான், ரஹ்மானியாபுரம் கிளை தலைவர் பாரூக் ,மக்கா நகர் கிளை தலைவர் சேகனா, தவ்ஹீத் நகர் கிளை தலைவர் நிரஞ்சன் ஒளி, இ.பி கிளை தலைவர் சதாம் உசேன் மற்றும் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஷேக் தாவூத் தலைமையில் கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகளும் செய்திருந்தனர் .
No comments:
Post a Comment