திருப்பதியில் பிரம்மோற்சவ விழா..... பக்தர்கள் சிரமம் இன்றி வாகன சேவைகளை காண ஏற்பாடுகள் தீவிரம்...... - MAKKAL NERAM

Breaking

Thursday, August 21, 2025

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா..... பக்தர்கள் சிரமம் இன்றி வாகன சேவைகளை காண ஏற்பாடுகள் தீவிரம்......

 


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை நடைபெறவுள்ள பிரமோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனை கோவில் நான்கு மாட வீதிகளில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜெ.ஷியாமள ராவ், கூடுதல் அதிகாரி வெங்கைய சவுத்ரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷவர்தன் ராஜு மற்றும் முரளிகிருஷ்ணா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


அப்போது, பக்தர்கள் சிரமம் இன்றி வாகன சேவைகளை எளிதில் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.


மேலும், செப்டம்பர் 24-ந் தேதி முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். பிரம்மோற்சவ நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மாட வீதிகளில் கூடுதல் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன.


பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்கள் சிரமமின்றி வாகன சேவைகளை காண ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டுள்ளதாக நிர்வாக அதிகாரி ஷியாமள ராவ் தெரிவித்தார். கேலரிகளில் இருக்கும் ஒவ்வொரு பக்தருக்கும் அன்னபிரசாதம் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment