போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி அரசு கலைக் கல்லூரி திருச்சி 22 போதை பொருள் தடுப்பு குழுவும் திருவெறும்பூர்உட்கோட்ட காவல் நிலையங்களும் இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு சிறு பேரணியை 26.08.2025 செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பாக நடத்தினர்.
அரசு கலைக்கல்லூர் திருச்சி 22 வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணி அண்ணா வளைவு பகுதிகளின் வழியாக அரசு தொழில்நுட்பக் கல்லூரி வரை சென்றடைந்தது.
மதியம் 12 மணிக்கு அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் பி சத்யா அவர்களும் திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்தின் துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) திரு . கா.விக்னேஸ் அவர்களும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பேரணியின் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போதை பொருள் எதிர்ப்பு வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி சென்றனர், போதைக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர், பொதுமக்களுக்கு தகவல் கையெழுத்து பிரசுரங்களை பகிர்ந்தனர்.
போதைக்கு எதிராக நடைபெற்ற இந்த சிறுபேரணியில் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே போதைப் பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட்டது. மாணவர்கள் சமூகத்தில் தங்களது பொறுப்பினை உணர்ந்து போதைப்பொருள் இல்லா கல்வி நிலையம் என்ற இலக்கை நோக்கி செல்வதற்கான உறுதியுடன் பங்கேற்றனர். முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றது மாணவர்களுக்கு ஊக்கத்தையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்த நிகழ்வின் சிறப்பான முன்னெடுப்பு எதிர்காலத்தில் இவ்வகை விழிப்புணர்வு செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளது.
இத்தகைய நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்கம் ஒழுங்கு மற்றும் சமூக நலனுக்கான ஆர்வத்தை வளர்க்கும் முயற்சியாக இருக்கும் போதை பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் மாணவர் சமூகத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்கள் ஆசிரியர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஒருமித்த உணர்வுடன் கலந்து கொண்டு போதைப்பொருள் நச்சு தாக்கங்களை குறித்த பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் பேரணியில் மாணவர்கள் பதாகைகள் அடையாள அட்டைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகர்களை கொண்டு சமூகத்தில் உறுதியான செய்திகளை பதிவு செய்தனர் இந்த சிறு பேரணிநிகழ்வின் மூலம் மாணவர்கள் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து ஆழமான புரிதலை பெற்றனர். சமூகநலனுக்கான தங்களது பொறுப்பை மற்றவர்களுக்கும் உணர்த்தினர் காவல் துறையினரிடம் கல்வி நிறுவனங்களும் கூட்டுப் பணியாற்றும் வாய்ப்பை பெற்றனர்.
மாணவ சமூகத்திற்குள் ஒரு விழிப்புணர்வு அலையை ஏற்படுத்தினர் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்ற மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் போதை பொருள் இல்லா சமுதாயம் உருவாகும் வரை நமது நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்ற உறுதியுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.
No comments:
Post a Comment