• Breaking News

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டார்குப்பம் அருள்மிகு பாலசுப்ரமணி திருக்கோவிலில் ஒரு ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர் எம்எல்ஏ, திமுக மாவட்ட பொறுப்பாளர்


    தமிழ்நாடு அரசு சட்டமன்ற அறிவிப்பு 2023 - 24 எண் 34ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி ஏழைகளுக்கு இலவச திருமண திட்டம் நடைபெறுவதை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறை சார்பில்  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆண்டார்குப்பம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.60,000/- மதிப்பில் சீர்வரிசை வழங்கி இன்று 1 ஜோடிகளுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

    இதில் கும்மிடிபூண்டி எம்எல்ஏ  டி.ஜே.எஸ் கோவிந்தராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இத்திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் ராஜசேகர குருக்கள்,  மற்றும் செயல் அலுவலர் மாதவன். ராகவன் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்பு வாணன் மாவட்ட துணை செயலாளர் உமா மகேஸ்வரி ஒன்றிய செயலாளர் ராஜா பொதுக்குழு உறுப்பினர் பா.செ குணசேகரன் , அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் திருமண விட்டார் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    No comments